வவுனியா குருமன்காடு பகுதியில் புலிக்குட்டி மீட்பு!!

303

P1

வவுனியா குருமன்காடு பகுதியில் வீடு ஒன்றில் புலிக்குட்டி ஒன்று இருப்பதாக வனவிலங்கு திணைக்களத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசாரின் உதவியுடன் அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு புலிக்குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந்த வீடு பூட்டப்பட்ட நிலையிலும் அந்த வீட்டில் சுமார் 200க்கு மேற்பட்ட வெற்று மதுப் போத்தல்களும், பெண்களின் ஆடைகளும், ஒரு மோட்டார் சைக்கிளும் காணப்பட்டது.

அத்தோடு வீட்டுக்குள் ஒரு பெண்ணும் ஆணும் இருக்கும் தடயங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. போதை மாத்திரைகள், பாவித்த ஆணுறைகள், போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல மறுப்பு தெரிவித்ததின் பின் வனவிலங்கு திணைக்களத்தின் மிருக வைத்தியரினால் புலிக்குட்டி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.