வவுனியாவில் திருட்டு சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் கைது!!

724

A6

வவுனியா, தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் வவுனியா படை தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை தாம் நேற்று கைதுசெய்தனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாத முற்பகுதியில் வவுனியா தெற்கிலுப்பைகுளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றும், வீடு ஒன்றும் இரவு வேளையில் உடைக்கப்பட்டு அங்கிருந்த தொலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டு இருந்தன.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதன்போது வவுனியா நகரப் பகுதியில் உள்ள படைத் தலைமையகத்தில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்றைய தினம் ஹெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்தனர்.

இவரை இன்று வவுனியா நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.