வவுனியா நீதிமன்றத்தில் கைதி தற்கொலை முயற்சி!!

857

vavunia_high_court

வவுனியா நீதிமன்றத்தில் நேற்று (28.08) விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

விசாரணைக் கைதி ஒருவரை பொலிசார் நேற்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதிசெய்துள்ளது.

இதனால் மனமுடைந்த கைதி நீதிமன்ற வளாகத்தில் வைத்து தகரம் ஒன்றினால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச் சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.