இலங்கை கிரிக்கெட் வீரர் கித்துருவன் மீது ஒழுக்காற்று விசாரணை!

239


Kithuruwanஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வீரர் கித்துருவன் வித்தானகேவுக்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கட் விசாரணையை நடத்தவுள்ளது.

அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இரவு, கித்துருவன் அணியினரை விட்டு பெண் ஒருவருடன் இரவை கழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



இந்தநிலையில் கித்துருவனுக்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அல்லது சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணை நடத்தும் என ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் ஊழலுக்கு எதிரான அலுவலர் லச்மன் டி சில்வா அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஒழுங்காற்றுக்குழு அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் உட்பட்டவர்களை சந்தித்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.



ஏற்கனவே கித்துருவன் இதேபோன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த வேளையில், அவரை தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியவே மீண்டும் அணியில் விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தார்.



இந்தநிலையில் சனத் ஜெயசூரியவின் மீது ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் நிர்வாகத்தினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.