வவுனியா உயர்தர மாணவர்களின் பிரிவின் இறுதித் தருணங்கள்!!

325


நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றுடன் (29.08) முடிவிற்கு வந்தது.

இறுதி நாளான நேற்று மாணவர்கள் தங்கள் நண்பர்களின் பிரிவையும் பாடசாலை வாழ்வின் பிரிவையும் வித்தியாசமான முறைகளில் வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.



வவுனியாவின் பெரும்பாலான ஆண்கள் பாடசாலைகளின் மாணவர்கள் வீதிகளில் ஒருவருக்கு ஒருவர் நிறப் பூச்சுகளை தெளித்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும் நண்பர்களுடன் புகைப்படங்களை எடுத்தும் தங்களின் பாடசாலை வாழ்வின் இறுதித் தருணத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

இவர்கள் வீதிகளில் இவ்வாறு நடந்துகொள்வதை ஒருசிலர் குறைகூறியபோதும் பலர் புன்னகையுடன்னும் மலரும் நினைவுகளுடனும் இரசித்துச் செல்வதை காணக் கூடியதாகஇருந்தது.



-படங்கள் பாஸ்கரன் கதீசன்-



11 12 14