வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு!!

378

காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு இன்று (30.08) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தமது உறவுகளை தொலைத்த மூன்று இன மக்களும் கலந்து கொண்டனர்.

காலை 9.30மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்விற்கு தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா உட்பட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், விநோகதாரலிங்கம் மற்றும் வட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள்,

மதத்தலைவர்கள், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பிரஜைகள் குழுவினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பிரதேச சபை, உறுப்பினர்கள் ஆகிய பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

30 31 33