வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா!!

348


வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 11 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.



வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் கொடி புதிதாக அமைக்கப்பட்ட கொடித்தம்பத்தில் ஏற்றப்பட்டு மகோற்சவ பெருவிழா ஆரம்பமானது.

5 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்கிகழமை கும்பாபிசேக தினத்தன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதுடன் சனிக்கிழமை 1008 சங்காபிசேகமும் இடம்பெறவுள்ளது.



10 நாட்கள் இடம்பெறவுள்ள இம் மகோற்சவ திருவிழாவில் தினமும் அன்னதாகமும் வழங்கப்படவுள்ளது. இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.



1 4 5 6 8 9 10