சென்னையை கலக்கும் ஆட்டோ அண்ணாதுரை!!

522

Auto

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை கலக்கி வருகிறார் ஆட்டோ அண்ணாதுரை. ஆட்டோகாரர்கள் என்றாலே நம் மக்கள் மத்தியில் பல எண்ணங்கள் தோன்றத்தான் செய்கிறது.

ஒரு சிலர் நல்லதாக கூறினாலும், நிறையப் பேர் ஆட்டோ என்று சொன்னாலே வெறுப்படைவதுண்டு. ஏமாற்றுபவர்கள், மீற்றருக்கு மேல் காசு கேட்பார்கள்.. என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஓ.எம்.ஆர் என அழைக்கப்படும் ராஜீவ் காந்தி சாலையில் ஷேர் ஆட்டோ ஓட்டி சற்று வித்தியாசமாக பிழைப்பு நடத்துகிறார் இந்த அண்ணாதுரை.

தனது ஆட்டோக்குள்ளே மினி நூலகத்தையே நடத்தி வருகிறார், பயணிகள் தாம் சென்றுசேரும் இடம் வரும்வரை தங்கள் பொழுதினை கழிப்பதற்காக தொலைக்காட்சி, போன்களுக்கான ரீசார்ஜ் வசதிகள், வைபை வசதி போன்றவற்றையும் வழங்கி வருகிறார்.

ஆட்டோக்களில் ஏறினாலே, பணத்தினை மீற்றருக்கு மேல் வாங்கிவிட்டார்கள் என்று முனுமுனுத்துவிட்டு இறங்கும் இந்த காலத்தில், இவருடைய ஆட்டோக்களில் பயணிப்பவர்களில் சிலருக்கு இலவச பயணத்தையும் மனமுவந்து வழங்கி வருகிறார்.

இந்த சேவைகளால் மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு, பாராட்டுகளும், விருதுகளும் கரம் வந்து குவிகின்றன.