பூமியை அச்சுறுத்த வரும் சூரியப் பிழம்பு : நாசா பரபரப்புத் தகவல்!!

584

Sun

சூரியனின் மிக வீரியமான பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும்.

இந்தச் சூரிய நடுக்கம் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் உச்சத்தை அடையும். அப்போது அதன் பிழம்புகள் மிக வீரியத்துடன் இருக்கும். இந்தச் சூரிய நடுக்கம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள விண்வெளி மையமான நாசா தன்னிடம் உள்ள சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி அண்ட் சோலார் ஹீலோஸ்பெரிக் அப்சர்வேட்டரி எனும் கண்காணிப்புக் கருவி மூலம் சூரிய நடுக்கத்தை ஆராய்ந்து உறுதி செய்துள்ளது.

இதுபற்றி நாசாவின் செய்தித் தொடர்பாளர் கேரன் ஃபோக்ஸ் கூறுகையில், இந்தச் சூரியப் பிழம்புகள் பூமியில் உள்ள ஜி.பி.எஸ். மற்றும் இதர தொலைதொடர்பு சிக்னல்களைப் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், நாளடைவில் சூரியப் பிழம்புகள் குறைந்துகொண்டே வந்தாலும் கூட சூரிய நடுக்கம் அதன் குறைந்தபட்ச அளவை அடையும் வரை இந்த‌ப் பிழம்புகளின் தாக்கம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

இதனால் மனிதர்களுக்கோ, பூமியில் உள்ள பிற உயிரினங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தன் தரை, கடல் மற்றும் வான்வழி தொலைதொடர்பு சாதனங்களை எல்லாம் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.