வாரியபொலவில் யுவதியின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் கைது!!

287


Vaariyapola

வாரியபொலவில் யுவதி ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



இளைஞர் குறித்த யுவதியை வாய்மொழி மூலம் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய யுவதி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் வாரியபொல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குறித்த இளைஞரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த யுவதியையும் பொலிஸார் கைது செய்து பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.