வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல்!!

344


GA

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர தமக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் குறித்து காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



காலி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரான அவர் நேற்று காலை தமக்கு இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறியே முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

அரசாங்க அதிபரின், காலியில் உள்ள வீட்டுக்கு வந்து இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



காலி மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளில் கடமையாற்றும் சகோதரர்கள் இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



இந்த சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.