ஹைதராபாத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்து தமிழில் ரா ரா, ரகளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக நேற்று பொலிசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விபச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு பிரசாத், ஏஜெண்டு பாலு மற்றும் சில தொழில் அதிபர்கள் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
இதில் பிற மாநிலங்களை சேர்ந்த பெரிய தொழிலதிபர்கள் பலர் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.