ஷங்கரின் ஐ படத்தில் வினோதமான பாடல் : கசிந்த ரகசியம்!!

342

I

இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்துள்ளது ஐ படம். ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது எல்லாருக்கும் தெரியும்.

அதே போல் வினோதமான விஷயங்களும் யோசிக்க முடியாத விஷயங்களும் தன்னால் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் தான் எந்திரன் படத்தில் வரும் கொசுக் காட்சி. அது போல் ‘ஐ’ படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன்.

அதில் ஒரு பாடலை விமானத்தில் பயணித்தவாறும், வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த ஒரு தோட்டத்திலும், இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து எழுதியிருக்கிறார் கபிலன்.

அது ஒரு வித்தியாசமான, சுகமான அனுவபம் என்று கூறியிருக்கிறார் கபிலன். இவர் எழுதிய அந்த 3 பாடல்களில் ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசை அமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.