திருச்சியில் இலங்கையர் ஒருவர் கொலை!!

301


Murder

தமிழகம் திருச்சி கருமண்டபம் என்ற இடத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் எஸ்.செல்வேந்திரன் என்ற 59 வயதானவரே கொல்லப்பட்டுள்ளார். தமது வீட்டுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் திரும்பிய நிலையில் வீட்டின் முன்னால் வைத்து அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். எனினும் கொலைக்கான காரணம் எவையும் வெளியாகவில்லை.

1990 ஆம் ஆண்டு செல்வேந்திரனும் அவரது குடும்பத்தினரும் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்று குடியேறியதாக தெரிவித்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.