இவ்வார இறுதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியாகும்!!

330


z-score-sri-lanka

புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்ளவதற்கான வெட்டுப் புள்ளிகளை இந்த வார இறுதிக்குள் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



2013ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் வெட்டுப் புள்ளிகளை வெளியிடத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முடிவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவற்றை மறு பரிசீலனை செய்து எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி இம்மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.