வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயம்!!

686

Vaal

வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வவுனியா, குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு இளைஞர் குழுக்களிடையே காணப்பட்டு வந்த பகைமையே நேற்று கைகலப்பாக மாறியதற்கான காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.

குருமன்காடு பகுதியைச் சேர்ந்த தபோதரன் தினேஸ்குமார் (25), மணியரசன் ரமணராஜ் (25) ஆகிய இருவருமே வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.