வவுனியாவில் பெண்ணொருவரின் தந்தையின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து பேஸ்புக் ஊடாக அனுப்பிய வவுனியா பொடியன்!!

438


276064624

வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்றை நடாத்தி வந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடமிருந்து வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.



பெண்ணொருவருக்கு அவரது தந்தையின் புகைப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் புகைப்படம் ஒன்றை குறித்த இளைஞன் பேஸ்புக் ஊடாக அனுப்பியமை தொடர்பில் பெண்ணின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பிலேயே இளைஞன் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணையின் போது குறித்த இளைஞனும், யுவதியும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. குறித்த இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.