நீதிமன்றத்தில் சரணடைந்த அழகிரி!!

604

Alagiri

மு.க.அழகிரி மீது கடந்த வாரம் 26ம் திகதி நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக மதுரை பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்

இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றிருந்தார். முன் ஜாமீன் பெற்ற அழகிரி நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்ட மதுரை ஜேஎம்-1 நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி, நீதிபதி திரிவேணி முன்பு சரணடைந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

அழகிரி நீதிமன்றத்தில் சரணடைந்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.