இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் 3-0 எனக் கைப்பற்றியது இந்திய அணி!!

396

India

இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கெதிரான தீர்மானமிக்க நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.

பேர்மின்ஹாமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 207 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இயல் பெல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சகல துறைவீரர் அலி இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இதேவேளை இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய மோஹித் ஷர்மாவிற்கு பதிலாக தவான் குல்கர்னிக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.