ஜடேஜா, அண்டர்சனுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்த ரசிகர்!!

485

A

இந்தியா- இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது ரசிகர் ஒருவர் ஜடேஜா மற்றும் அண்டர்சனுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து வீரர் அண்டர்சன், இந்திய வீரர் ஜடேஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி தள்ளிவிட்டதாக பிரச்சனை வெடித்தது.

பின்னர் இந்த பிரச்சனையானது சமரசத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடந்து வருகிறது.

இந்த தொடரின் 3வது ஒருநாள் போட்டியின் போது ரசிகர் ஒருவர் ஜிம்மி மற்றும் ஜட்டு இருவரும் இணைந்து ஐஸ் பக்கெட் சவாலை ஏற்ற வேண்டும் என எழுதிய பலகையை தூக்கிக் காட்டினார். மேலும் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

A1