வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்தின், கூட்டுறவு விவசாய விற்பனை நிலையம் நேற்று (11.09.) சன்னாசி பரந்தனில் தலைவர் திரு.இராசேந்திரம் அவர்களின் தலைமையில், வவுனியா கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.கு.இவீந்திரநாதன் அவர்களினால் திறந்துவைக்கப் பட்டது.
அங்கத்தவர்களின் நலன்கருதி செயற்பவுள்ள, இவ் விற்பனை நிலையத்தில் பசளை, கிருமிநாசினி வகைகளும் மற்றும் விதை வகைகளையும் நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.