ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம்!!

295

scho

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் புலமைப் பரிசில் பரீட்சை இரண்டு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் நடைபெற்றன.

எதிர்வரும் 2015ம் ஆண்டு முதல் ஒன்றரை மணித்தியாலம் பரீட்சை நடைபெறவுள்ளது. இரண்டு வினாத்தாள்களுக்கு பதிலாக இனி ஒரே வினாத்தாள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நவம்பர் மாதம் சகல பாடசாலைகளுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.