வவுனியா விபத்தில் மயிரிழையில் தப்பிய தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள்!!

443

Maha

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை காலை 7.35 மணியளவில் பாடசாலை முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் கடமையில் நின்ற பொலிஸார் குறித்த கடவையூடாக மாணவர்கள் செல்வதற்காக அவ்வீதியால் பயணித்த வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் போது மூன்றுமுறிப்பு பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கி வந்த இராணுவத்தின் தண்ணீர் பவுஸர் நிறுத்தப்பட்ட போது அதன் பின்னால் வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் பவுஸருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது தண்ணீர் பவுஸரை செலுத்திய சாரதி தனது வாகனத்தை நகரவிடாது கட்டுப்படுத்தியதால் மஞ்சள் கடவையில் பயணித்த மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.