வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம்!!

279

Va

வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த செல்வி செல்வநாதன் கேமோனிஷா (17) கடந்த 19.08.2014 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் கடும் காய்ச்சல் காரணமாக நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்திய பரிசோதனையின் போது ஈரல் பாதிக்கப்பட்டமை அறியப்பட்டுள்ளது.

இவருக்கு கொழும்பு லங்கா மருத்துவமனையில் மருத்துவம் செய்த போதும் குணமடையவில்லை. இந்நிலையில் இந்தியா கொண்டு செல்லப்பட்ட இவர் இந்தியாவில் சிகிச்சை பலனின்றி கடந்த 15.09 அன்று காலமானார்.

இச் சிறுமிக்கு ஈரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு பணம் தேவை என செய்தி வெளியிட்டிருந்தோம். இச் செய்தியைப் படித்து, உதவி செய்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக இவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு மோனிஷாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

தொடர்புபட்ட செய்தி..

வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த சிறுமிக்கு அவசர உதவி தேவை!! (படங்கள், மருத்துவ சான்றிதழ்கள் இணைப்பு)