மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா வடக்கு பிரதேசத்தில் அதிகரித்து வரும் மது பாவனையை கட்டுப்படுத்த அரச அதிகாரிகளுக்கு செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் வெளிக்களத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு கிராம மட்டத்தில் மது பாவனையை கட்டுப்படுத்தி பொருளாதார மேம்பாட்டை அதிகரிப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் இதன்போது தெளிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் கிராமங்களில் மது பாவனையின் அதிகரிப்புக்கான காரணங்கள், அவற்றால் ஏற்படும் பொருளாதார பின்னடைவுகள் தொடர்பில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் முன்வைத்த கருத்துகளுக்கு தீர்வினை வழங்கும் செயற்பாடுகளும் இதன்போது இடம்பெற்றிருந்தன.
இதேவேளை வவுனியா வடக்கு பிரதேசத்தில் மது பாவனையின் அதிகரிப்புக்கான காரணங்கள் தொடர்பில் பிரதேச செயலாளரினால் கருத்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன.