பெப்சியில் எபோலா வைரஸ் : தீவிரவாதிகள் சதி!!

295

ebolo

அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்ப ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. விரைவில் தரைவழித் தாங்குதலை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.‘

இந்நிலையில் தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரை அழிக்கப் போவதாக கானொளி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கிடையே தீவிரவாதிகளின் ஃபோரமில் ஒரு தீவிரவாதி புதிய திட்டம் ஒன்றை குறித்து எழுதியுள்ளார்.

அதில் அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்பினால் எப்படி இருக்கும் என்ற தலைப்பில் அந்த தீவிரவாதி எழுதியதில் பல ஐடியாக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு பெப்சி பாட்டிலில் எபோலா வைரஸை கலந்து அதை ஒரு பையில் வைத்து அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள நீர் நிலைகளில் கலந்து விட வேண்டும் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஆபிரிக்காவுக்கு அனுப்பி அவர்களை எபோலா தாக்கியதும், அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு வைரஸை பரப்பச் சொல்ல வேண்டும் என்பது அந்த நபரின் பரிந்துரைகளில் ஒன்று.