அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது தமிழில் ரஜினி ஜோடியாக லிங்கா படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இருபடங்கள் கைவசம் உள்ளன. இதில் ருத்ரமாதேவி படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாகுபலி படத்தில் பிசியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் அனுஷ்காவுக்கு 32 வயது ஆவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீவிரம் காட்டினர். மாப்பிள்ளை தேடவும் தொடங்கினார்கள்.
தற்போது மாப்பிள்ளை முடிவாகி விட்டதாக கூறப்படுகிறது. யார் என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். மாப்பிள்ளை சினிமாவை சேர்ந்தவர் இல்லை என்றும் ஆந்திராவில் பிரபல தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கு இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அனுஷ்காவை அணுகி கதை சொல்லி நடிக்க அழைத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அந்த கதையும், கரக்டரும் அனுஷ்காவுக்கு ரொம்ப பிடித்து போனதாம். ஆனால் திருமணத்துக்கு தயார் ஆவதால் அந்த படத்தில் நடிக்க இயலாது என மறுத்து விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.