வவுனியா ஓமந்தையில் விடுதலைப் புலிகளின் ஜொனி ரக மிதிவெடிகள் மீட்பு!!

609

11

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 12 மிதிவெடிகள் விசேட அதிரடிப் படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன. ஓமந்தையில் உள்ள கருங்காலிக் குளம் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் ஜொனி ரக மிதிவெடிகளே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று அரச சார்பற்ற நிறுவனமொன்று காணி ஒன்றை தோட்டச் செய்கைக்குக் கையளிப்பதற்காக துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில், பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மிதிவெடிகளைக் கண்டதும், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்கினர்.

இன்று அப்பகுதிக்கு வந்த விசேட அதிரடிப் படையினர் அந்த மிதிவெடிகளை மீட்டு அவற்றை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.