வவுனியாவிற்கு கஞ்சா கடத்த முற்பட்டவர் கைது!!

627

A1

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு 60 கிராம் கஞ்சாவை கொண்டு வந்த ஒருவரை ஈரப்பெரியகுளத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை ஈரப்பெரியகுளம், நாவகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கஞ்சா வைத்திருந்த இருவர் ஈரப்பெரியகுளம் பொலிஸாரால் அப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலே குறித்த நபர் கஞ்சாவுடன் ஈரப்பெரியகுளம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.