ஐந்து மனைவிகளால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!!

343

நைஜீரியாவில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது ஐந்து மனைவிகளால் கற்பழிக்கப்பட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு (Ugbugbu) பகுதியில் உரோகோ ஓனோஜா (Uroko Onoja) என்ற தொழிலதிபர் தனது ஆறு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த இவர் தனது கடைசி மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த மற்ற 5 மனைவிகள் உரோகோவும், கடைசி மனைவியும் இருந்த படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

அப்போது அனைவரும் அவரை அடித்து தாக்கியது மட்டுமின்றி கத்தி முனையில் அவரை மிரட்டி தங்களுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அவர் ஒவ்வொருவருடனும் உறவு கொண்டதால், சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்பின் உடனடியாக அனைத்து மனைவிகளும் அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை நடத்தி, தப்பியோடியதில் 2 மனைவிகளை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் அடுத்தடுத்து உடலுறவு வைத்ததால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு உரோகோ உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

W1 W2