4 ஆண்களுடன் திருமணம் செய்த பெண் கல்லால் அடித்துக் கொடூர கொலை!!

571


Stone

சோமாலியாவில் நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.



ஆபிரிக்க நாடான சோமாலியாவில் தென் கடலோர மாவட்டமான பராவேயை சேர்ந்த பெண் சபியோ அகமது ஜுமாலி(33), இவர் நான்கு ஆண்களை திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

அல் ஷபாப் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் பராவே மாவட்டம் இருப்பதால், கடுமையான சட்டதிட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது.
எனவே குறித்த பெண் சபியோ கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது இஸ்லாமிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷேக்முகமது அபு அப்துல்லா, சபியோவை பொது மக்கள் மத்தியில் கல்லால் அடித்து கொல்ல உத்தரவிட்டார்.



இதன்படி நேற்று பராவே மாவட்டத்தில் பொது இடத்தில் தலை மட்டும் தெரியும்படி மண்ணில் புதைக்கப்பட்ட சபியோ, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.