யாழிலிருந்து கொழும்பு சென்ற வான் விபத்தில் இளைஞன் பலி : இருவர் படுகாயம்!!

667

Acci

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹையேஸ் வான் விபத்துக்குள்ளாகியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் மாதம்பை பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காந்தி சுஜி என்ற இளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வான் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த இளையஞரின் தந்தையும், நண்பரும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.