வவுனியா, புளியங்குளம் இராமனூர் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையொன்றை மீட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இராமனூர் பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் யானையொன்று இறந்து கிடப்பதாக மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் இந்த யானையை மீட்டுள்ளனர்.
இப் பகுதியில் அண்மைக்காலமாக யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டதுடன் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களை அழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மிருக வைத்தியர் மூலமாக யானையின் மரணம் தொடர்பில் நாளை ஆராயவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.