சிறுமியை வல்லுறவு செய்த நபருக்கு 15 வருட கடூழிய சிறை!!

948


Abuse

சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு அநுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றம் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



குறித்த வழக்கு இன்று (01.10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நீதிபதி கேமா சுவர்ணாதிபதி தீர்ப்பளித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 40,000 ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.