விபச்சார வழக்கில் நடிகை ஸ்வேதா பாசுவிற்கு செக் வைத்த நீதிமன்றம்!!

301

Swetha_Basu

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை ஸ்வேதா பாசுவை மேலும் ஆறு மாதங்கள் வரை காப்பகத்திலேயே இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹைதராபாத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பொலிவுட் நடிகை ஸ்வேதா பாசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்த பொலிசார் அவரை மறுவாழ்வு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

பொலிவுட்டில் குழந்தை நட்சித்திரம் விருது பெற்ற இவர், தமிழில் யா யா, சந்தாமாமா போன்ற படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

தனக்கு பணம் இல்லாத குறையினாலும், பட வாய்ப்புகள் கிடைக்காததாலும் விபச்சாரத்தில் விழுந்ததாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது தாயார் தனது மகள் ஸ்வேதாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு அளித்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த நடிகைக்கு இன்னும் ஆலோசனையும், மறுவாழ்வும் தேவைப்படுகிறது என்பதால் இவரை மேலும் 6 மாதங்களுக்கு மறுவாழ்வு காப்பகத்தில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகையின் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதீப்குமார் கூறுகையில், இந்த உத்தரவை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அந்த மனு இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.