வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்கள் சிறுவர் தினத்தை முன்னிட்டு கௌரவிப்பு!!(படங்கள்)

329

இன்று (01.10) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்தவாரம் வெளியாகியிருந்தமை அறிந்ததே.

அந்த வகையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் மேற்படி பரீட்சையில் 19 மாணவ மாணவியர் சித்தியடைந்தனர்.

சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு இன்று சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு அம்மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்திய ஆசிரியர்களாலும் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்களாலும் ஒழுங்கமைக்கபட்டிருந்தது.

-பண்டிதர்-

12 13 14 15 16 17