வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் நவராத்திரி கலை விழா 24வது வருடமாக நேற்று (01.10) சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர் திரு.நா.சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
பாலர் பாடசாலை மாணவர்களின் நடனம், பேச்சு, உட்பட பல கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.