வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் நுழைவாயில் திறப்புவிழா!!

355

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் தியாகராசா, இந்திரராசா ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் (CCTMS) நுழைவாயில் கடந்த 10.10.2014 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி தர்மகுலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர்களான தியாகராசா, இந்திரராசா ஆகியோரும், வவுனியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வவுனியா தெற்கு கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, பொருளியலாளர் எஸ்.சிவகுமாரன், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி மாணிக்கவாசகம், கணேசலிங்கம், வலய பிரதிநிதி வசந்தி குலராசா, பாடசாலையின் பிரதி அதிபர் ஜெரோம் பிரதாபன் ஆகியோரும் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5