ஒட்டுசுட்டான் பண்பாட்டுப் பெருவிழாவில் கலைஞர்கள் கௌரவிப்பு!!

342

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா அண்மையில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் குருபரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள் ஐவர் கௌரவிக்கப்பட்டதில் வளர்ந்து வரும் இளங் கவிஞர் வே.முல்லைத்தீபனும் கௌரவிக்கப்படார். இவருக்கான கௌரவத்தினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் அருந்தாகரன் அவர்கள் வழங்கினார்.

பண்பாட்டு ஊர்வலம் முடிவடைந்த பின்னர் பிரதேச கலை கலாசார பண்பாடுகளை பிரதிபலிக்கும் நோக்குடன் பாரம்பரிய கூத்துக்கள், நாடகங்கள், நிகழ்வுகள் இடம்பெற்றன. இக் கௌரவங்களானது.. வளர்ந்துவரும் இளவல்களை ஊக்கப்டுத்துவதுடன் மேலும் இலக்கியப் பணி செய்யத் தூண்டும் என்பது பலரின் கருத்தாக இருந்ததை அவதானிக்கக் கூடியதாகயிருந்தது.

1 2