24 வருடங்களின் பின்னர் யாழில் உத்தியோகபூர்வமாக கால்பதித்தது யாழ்தேவி!!

890

24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. பளையில் இருந்து முற்பகல் 10 மணி அளவில் யாழ்தேவி ரயில் பயணத்திணை ஆரம்பித்துள்ளது.

பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பின்னர் கொடிகாமம், நாவற்குழி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையங்களையும் திறந்து வைத்ததுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதான பகையிரத நிலையத்தையும் திறந்து வைத்தார்.

பளையில் இருந்து முற்பகல் 10 மணி அளவில் யாழ்தேவி ரயில் பயணத்தை ஆரம்பித்து 11.15 அளவில் யாழ்ப்பாணத்தினை சென்றடைந்தது.

1 2 3 4 5 6