நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!!

413


Rain

இலங்கையின் மேல் வளிமண்டபத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வாயு அமுக்க நிலை காரணமாக நாட்டில் அனைத்து இடங்களிலும் பரவலான மழை பெய்வதுடன் சில இடங்களில் 100மி. மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.



நாட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து வரும் இந்த அமுக்க நிலை அலை, அலையான நீரற்றதாகவே காணப்படும். இதனால் நாட்டில் இந்தப் பகுதியில்தான் மழை பெய்யும் எனக் கூற முடியாது. எனினும், அனைத்து இடங்களிலும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும்.

கடும் மழை பெய்வதுடன் பலத்த இடிமின்னல் ஏற்படலாம். இடி மின்னலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வழிவகைகள் செய்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.