இலங்கையில் கர்ப்பிணிகளுக்கும் எயிட்ஸ் தொற்று!!

303

AIDS

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எயிட்ஸ் அச்சுறுத்தலின் ஒரு கட்டமாக எயிட்ஸ் நோய் தொற்றிய ஐந்து கர்ப்பிணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான மருத்துவப் போராட்டங்களின் பயனாக இவர்களில் நால்வர் எயிட்ஸ் தொற்று இல்லாத ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் எயிட்ஸ் தொற்றியுள்ளது.

இதனையடுத்து தற்போது நாடு தழுவிய ரீதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பராமரிப்பின் ஒரு கட்டமாக எயிட்ஸ் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குருதிப் பரிசோதனை மேற்கொள்வதற்கான சாதனங்கள் சுகாதார அமைச்சினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப்பொறுத்தவரை ஏனைய நாடுகளைப்போன்று விலைமாதுகளின் மூலமாக எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. அதற்குப் பதிலாக ஆண்களின் மூலமாகவே எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவிக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.