உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சை 26ம் திகதி!!

323

IT

2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சைகள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த பரீட்சை 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறும் என, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடுபூராகவுமுள்ள 1176 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில், ஒரு இலட்சத்து 49,784 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைகளுக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காத மாணவர்கள் 0112 784 208 அல்லது 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இதேவேளை இந்தப் பரீட்சைகளுக்கு சிறைச்சாலையிலுள்ள 16 கைதிகளும் தோற்றவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.