கடந்தவாரம் பதுளை கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபையின் செயலாளர் திரு.சத்தியசீலன், நகரசபையின் முன்னாள் நகரபிதா திரு.எஸ்.நாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றன.
-சுகுமார்-