வவுனியாவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!!

300

vaal

வவுனியா, புளியங்குளம், பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தையா செல்வராசா என்ற குடும்பஸ்தர் அவர்களின் வீட்டினுள் புகுந்த சிலர் அவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளதாகவும் காயமடைந்த இவர் உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.