வவுனியாவை சேர்ந்த சமஸ்கிருத பண்டிதர் சதாசிவ சர்மாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

284

யாழ்ப்பாணம் மட்டுவில் மற்றும் வவுனியா கோவில்குளம் ஆகிய இடங்களில் வசித்து வருபவருமாகிய “சமஸ்கிருத பண்டிதர்” சதாசிவசர்மா 15.11.2014 அன்று கொழும்பில் இடம்பெற்ற ராம கான சபாவின் பவள விழாவின் போது சம்ஸ்கிருத பணியில் ஆற்றிய பெரும் பணிக்காக கொழும்பு இராமகான சபாவினால் ‘வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

சமஸ்கிருதத் துறையில் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் பல மாணவர்களை உருவாக்கியதோடு பல நூல்களையும் வெளியிட்டு அவர் ஆற்றிவரும் பணி அளப்பெரியது. அவர் பணி தொடர இறைவனைவேண்டி வாழ்த்தி வணங்குகின்றோம்.

-கஜேந்திரன்-

1 2 3 4 5 6 7 8