ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு குறித்து முந்திக் கொண்டு செய்திகளை வழங்கும் நோக்கில் அலரிமாளிகையில் செய்தியாளர்கள் குவிந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.15 தாண்டிய பின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தற்போது தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
இதன் காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தற்போது அலரி மாளிகை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தரப்பினருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களும் அலரிமாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஜனாதிபதியின் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.