பேஸ்புக் விமர்சனத்தால் சுகவீனமடைந்த பாடசாலை அதிபர்!!

296


Fb

பாடசாலை அதிபர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த பின் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.



நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழிவுபடுத்தி முகப்புத்தகத்தில் செய்தி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இதனைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இதேவேளை, குறித்த பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள சிலர், அங்கிருந்த ஆசிரியர் ஒருவரை கடுமையாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.



இத்தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து,குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது.

இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, அவர்கள் நேற்று நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.


இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும், நாவலப்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.