சட்டவிரோதமாக தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு சிறைத் தண்டனை!!

290

A9

இலங்கையில் 24 வருடங்கள் வீசா அனுமதியின்றி தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு குறைவாக வேலைகளுடன் கூடிய ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத சிறைத் தண்டனை முடிந்த பின்னர் பிரித்தானிய பிரஜையை மிரிஹானவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்படும் முகாமில் ஒப்படைக்குமாறு பண்டாரவளை நீதவான் ஜெயராம் ட்ரெட்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

ரிச்சர்ட் டேவிட் என்ற 65 வயதான பிரித்தானிய பிரஜைக்கே இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 24 ஆண்டுகளாக வீசா அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்துள்ளார்.