ஹொட்டல் அறையில் இந்திய வீரருடன் தங்கியிருந்த அழகி யார் : விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை!!

298

beauty

ஐ.பி.எல் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு விசாரணை நடத்தி உச்சநீதி மன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.

இதில் இலங்கையில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஆசியக்கிண்ண போட்டியின் போது இந்திய வீரருடன் தங்கியிருந்த அழகி யார் என கேள்வியெழுப்பியுள்ளது.

இந்தப்போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவரின் ஹோட்டல் அறையில் அழகி ஒருவர் அதிகாலை 4 மணி வரை தங்கி இருந்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

பின்னர் இந்த அழகி மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றின் நிர்வாகி என்பது தெரியவந்தது. அந்த அழகி அன்று இரவே தமுல்லாவில் இருந்து கொழும்பு செல்ல இருந்தார்.

வீரர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர் ஹொட்டல் அறையில் தங்கி இருந்ததாகவும், சூதாட்ட விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு வீரரின் அறையில் தான் அந்த அழகி தங்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது

தற்போது இந்த விசாரணை குழு இலங்கையில் உள்ள ஹோட்டல் அறையில் இந்திய வீரருடன் தங்கி இருந்த அழகியிடம் விசாரணை செய்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல் இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த அழகி தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு வீரரை திருமணம் செய்ய இருக்கிறார் என்றும், இந்த திருமணம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.